| 'எனக்காக அரசியல் யாப்புத் திருத்தம் முன்வைக்கப்படவில்லை' என்கிறார் மஹிந்த! |
|
|
|
| வெள்ளிக்கிழமை, 03 செப்டம்பர் 2010 00:45 |
|
சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் 59வது வருடாந்த தேசிய மாநாடு அலரி மாளிகையில் நேற்று நடைபெற்றது. இம்மாநாட்டில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாற தெரிவித்துள்ளார். ஜனாதிபதி பதவியை இரண்டு தடவைகள் வகித்த ஒருவரை மீண்டும் அப்பதவிக்கு தெரிவு செய்வதா? இல்லையா என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் இத்திருத்தத்தின் ஊடாக மக்களிடம் அளிக்கப்படுகின்றது. நாம் மக்கள் மயமான அரசியல்யாப்பு திருத்தத்தையே முன்வைக்கவிருக்கின்றோம். இதனூடாக ஆறு வருட பதவிக் காலத்தை 12 வருடங்களாக நீடிக்கும் நோக்கம் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. மக்கள் விரும்புபவர் தான் ஜனாதிபதியாகத் தெரிவாவார். தற்போது நடைமுறையிலுள்ள அரசியல் யாப்பின் கீழ் மூன்றிலிரண்டு பெரும்பான்மையைப் பெற முடியாது என அரசியலமைப்பு விமர்சகர்கள் கூறினர். ஆனால் நாம் அதனை முடியும் என நிரூபித்துள்ளோம். சூரியனும், சந்திரனும் இருக்கும் வரையும் இந்த யாப்பு இருக்க வேண்டியதில்லை. நாட்டு மக்களின் தேவைக்கு ஏற்ப அது திருத்தப் படவேண்டும். அபிவிருத்தியும், தேசிய சமத்துவமும் மாறவேண்டும். மக்களின் இறையாண்மையை வலுப்படுத்தக்கூடிய வகையில் அரசியல் யாப்பு மாற வேண்டும். நாம் இப்போது அரசியலமைப்பு திருத்தத்தை மக்கள் முன்வைத்திருக்கின்றோம். அது மக்கள் மயமான அரசியல்யாப்பு. இந்த நாட்டைக் கட்டியெழுப்புவதையும், அபிவிருத்தி செய்வதையும் நோக் காக கொண்டு தான் இந்த யாப்பு திருத்தம் முன்வைக்கப்பட்டிருக் கிறதே தவிர எனது பதவிக்காலத்தை நீடித்துக்கொள்ளுவதற்காக அல்ல. அப்படி நினைப்பது தவறு. இத் திருத்தம் ஜனாதிபதி பதவிக்கால த்தை நீடிக்கக் கூடியதல்ல. தற்போதைய அரசியல் யாப்பின் 9 ஆவது சரத்தில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தகுதியற்றவர்களின் பட்டியல் உள்ளது. அதில் மனநோயாளர்கள், லஞ்சம் பெற்றவர்கள், வங்குரோத்துகாரர்கள் ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர். மக்களின் வாக்கு மூலம் இருமுறை ஜனாதிபதி பதவிக்கு தெரிவு செய்ய ப்பட்டவர்களும் அப்பட்டியலில் இவர்களுடன் சேர்க்கப்பட்டுள்ளனர். இதனை நீக்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம். அரசியலமைப்பு சபை பாராளுமன்றத்திற்கு வெளியே இருக்கி ன்றது. இதற்கு மாற்றமாக பாராளுமன்ற சபாநாயகர், பிரதமர், எதிர்க்கட்சி தலைவர் ஆகியோர் மூவரையும் இன அடிப்படையில் தமிழர் சார்பாக ஒருவரும், முஸ்லிம் சார்பாக ஒருவரும் இச்சபைக்கு நியமிக்கப்படுவர். மக்கள் பாராளுமன்றத்திற்கு அதி காரத்தை வழங்கும் படியும், அதுவே உயரிய இடம் என்கின்ற னர். அதனையே நாம் செய்கின் றோம். அதனால் மக்களுக்கு உண் மைகளை தெளிவுபடுத்த வேண்டியுள்ளது. நாம் நாட்டை ஐக்கியப்படுத்தியுள்ளோம். இனி நாட்டை அபிவிருத்தி பாதையில் இட்டுச் செல்ல வேண்டியுள்ளது. இதற்கு சிறீலங்கா சுதந்திர கட்சி வலுவான பங்களிப்பை அளிக்கவேண்டும். அதனையே நாம் எதிர்பார்க்கின் றோம். எமக்கு எப்போதும் இடதுசாரிக் கட்சிகள் பக்கபலமாக இருந்தன. எமது தனித்துவத்தையும், அந்தக் கட்சிகளின் தனித்துவத்தையும் பேணிக் கொண்டு நாட்டுக்காக வேலை செய்ய எமக்கு சந்தர்ப்பம் கிடைக்கப்பெற வேண்டும். அதனால் நாம் எல்லாக் கட்சிகளுடனும் சக வாழ்வுடன் செயற் பட கூடிய வர்களாக இருக்கவேண் டும். இப்போது தமிழ், முஸ்லிம் தலைவர்கள் எமது கட்சியில் உருவாகி வருகின்றார்கள். ஆனால் ஒரு சந்தர்ப்பத்தில் எமது கட்சி யாழ்ப்பாண தமிழரை பிரதிநிதித்துவப்படு த்துவதற்காக மிகவும் சிரமப்பட்டிருக்கின்றது.
|