| நடமாடும் சேவையை பார்வையிட த.தே.கூட்டமைப்பினருக்கு அழைப்பில்லை. |
|
|
|
| வியாழக்கிழமை, 02 செப்டம்பர் 2010 23:51 |
|
இவ்வாறே முல்லைத்தீவு மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில் நடைபெற்ற அபிவிருத்திக் கூட்டங்களிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். வாக்களித்த மக்களின் அபிவிருத்தி தொடர்பாக தமது கருத்துக்களை எடுத்துரைப்பதற்குக்கூட சந்தர்ப்பம் மறுக்கப்படுவதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். மேற்படி ஓமந்தை, சேமமடு மக்கள் கடந்த 15ஆண்டுகளுக்கும் மேலாக இடம்பெயர்ந்து இப்பொழுதுதான் தமது கிராமங்களில் குடியேறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களது விடயத்தில் சிறப்புக் கவனம் செலுத்தப்பட வேண்டும். நடமாடும் சேவையின்பொழுது நான் இவைகளை நேரில் சென்று உரிய அதிகாரிகளிடம் விளக்கி அம்மகளுக்குத் தேவையான உதவிகளை மேற்கொள்ளலாம் என்றிருந்த வேளையில் எம்மை அழைக்காதது எமக்கு வருத்தமளிப்பதுடன், எமது உரிமைகள் மீறப்பட்டுள்ளன என்பதையும் இங்கு குறிப்பிட விரும்புகின்றேன் என்று தனது ஆழ்ந்த கவலையையும் கண்டனத்தையும் சிவசக்தி ஆனந்தன் வெளியிட்டுள்ளார். |